×

உன் பையன் பண்ண வேலைக்கு பொள்ளாச்சிக்காரங்க நாண்டுகிட்டு சாகணும்..... திருநாவுக்கரசு தாயுடன் வாக்குவாதம்

பொள்ளாச்சி கோர்ட்டில் திருநாவுக்கரசு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோர்ட் வளாகத்தில் அவரின் தாய் லதாவிடம் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் ஆவேசமாக பேசியதாவது: `எனது மகன்தான் இந்த தவறை செய்தான் என்று தெரியுமா எனக் கேட்டார். அதற்கு வக்கீல் மற்றும் பொதுமக்கள், எத்தனை பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுள்ளது. அதைபற்றி உங்களுக்கு கவலை இல்லை. பெண்களின் இந்த வீடியோவை வேறு ஒருவரை அடித்துதான் வாங்கியதாக உங்க மகனே கூறி உள்ளான். அவ்வளவு உண்மையா இருந்தா அவனே கமிஷனர் அலுவலகத்தில் வீடியோவை கொடுத்திருக்கலாம். உங்களுக்கு உங்க பையன்தான் முக்கியம் என்றனர். அதற்கு தாய் லதா, அவனை நீங்கள் எல்லாரும் சேர்ந்துதான் அடித்துள்ளீர்கள்.  இந்த வழக்கில் என் மகனுக்கு எந்த சம்பந்தமுமில்லை.

அதற்கு வக்கீல்களும், பொதுமக்களும் உங்க பையன் பண்ணாம வேறு யார் பண்ணினது. பணத்திமிரால் நடந்தது. ஒன்றிரண்டு பொண்ணா,  சும்மா இல்லை. 300, 400 பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க. என் பையன் தவறு செய்யல. அனைவரும் சேர்ந்து அவனை அடித்துதான் ஒப்பு கொள்ள வச்சீங்க. நீங்கள் கூட்டமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு அரசியல் பின்னணி உள்ளது. யாருக்கு தெரியும். நான் படிக்கவில்லை. என்ன பழி வேண்டுமானாலும் போடுங்கள். இது ஆண்டவனுக்குதான் தெரியும். கொஞ்சம் விஷம் கொடுங்கள். குடித்துவிடுகிறோம். அதற்கு மக்கள், பண திமிரு அதனால்தான் உன் மகன் இந்த தவறை செய்திருக்கிறான். உங்க குடும்பத்துக்கு பேச என்ன அருகதை இருக்கு. உன் பையன் செய்த தவறுக்கு பொள்ளாச்சியில் அனைவரும் நாண்டுகிட்டுதான் சாகணும் என மக்கள் ஆவேசமாக கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirunavukarasu , pollachi, Thirunavakarasu,
× RELATED தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்