×

பண்ணை வீட்டு கதவை உடைத்து போலீஸ் சோதனை: கட்டுக்கட்டாக சிக்கிய ஆணுறைகள்

பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம்  என்ற கிராமத்தில் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது.  இந்த பண்ணை வீட்டில் தான் திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். 10 க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை 4 மணிக்கு அந்த பண்ணை வீட்டுக்கு சென்றனர். வீடு பூட்டி கிடந்தது. இதையடுத்து போலீசார் பண்ைண வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று  சோதனையிட்டனர். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் பாலியல் வீடியோ தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது. மேலும், வீட்டுக்குள் ஏராளமான ஆணுறைகள் வாங்கி வைத்திருந்தனர். வீட்டை சுற்றிலும் ஏராளமான ஆணுறைகள் கிடந்துள்ளன.  

இதற்கிடையில், சோதனை தொடர்பான தகவல்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசனிடம் கேட்டபோது, இது வழக்கமான சோதனை தான், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இது குறித்து ஏதும் சொல்ல முடியாது என்றார். இதே போல் திருநாவுக்கரசின் கூட்டாளிகளில் ஒருவரான சதீஸ் என்பவருடைய தந்தை பொள்ளாச்சி நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையிலும் போலீசார் சோதனையிட்டனர்.

பொள்ளாச்சி விஐபி பின்னணி...?
பொள்ளாச்சி விஐபியின் இரு மகன்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது. இதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்வது சந்தேகத்தை வலுவாக்கியுள்ளது. போலீசில் புகார் அளித்த பின், மவுனமாக இருந்த மாணவியின் உறவினர்கள் இந்த வழக்கின் விவரங்கள் தொடர்பாக யாரிடமும் பேசவில்லை. பல நாட்களுக்கு பின் ‘பொள்ளாச்சி விஐபி தொடர்பு’ குறித்து தகவல் பரவிய பின்னர் பாதிக்கப்பட்ட மாணவியின் ‘ஆடியோ’ வெளியானது. பின்னர், உறவினர்கள் பரமகுரு, பழனிச்சாமி மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து நிருபர்களிடம் விளக்கம் அளித்தனர். “பொள்ளாச்சி விஐபி உதவினார், இதை எங்கு வேண்டுமானாலும் சொல்லுவோம்” என அவர்கள் கூறினர். இதன் பின்னணி பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண பிரிவில் வழக்கு
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 354  (ஏ, பி), 392 (பாலியல் ரீதியான துன்புறுத்தல், வழிப்பறி ) தகவல் ெதாழில்நுட்ப அடிப்படையில் பாதிப்பு ஏற்படுத்துதல் என்ற பிரிவில் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பல் பள்ளி மாணவிகளையும் பலாத்காரம்  செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தீவிரமாக விசாரித்தால்  ‘போஸ்கோ’ சட்டத்தின் (சிறார் பாலியல் வன் கொடுமை) கீழ் வழக்கு பதிவு செய்ய  முடியும். ஆனால் போலீசார் இதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. போலீசார்  பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்தது பொதுமக்களிடையே அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Farm house, police, condoms
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...