சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், மகளிர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்கு பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி முக்கிய வழக்குகள் விசாரிக்கப்படும் மகளிர் நீதிமன்றத்திற்கு புதிதாக எல்.லேகா என்ற பெண் வக்கீல் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தை சேர்ந்த இவர், கடந்த 13 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றுகிறார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி