×

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தம் மீது அவதூறு வழக்குகள் : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தம் மீது அவதூறு வழக்குகள் உள்ளதாக அம்மா முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிலை வைத்ததில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை டிடிவி தினகரன் தரைகுறைவாக பேசியதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

 அதே போல் தினகரன் ஆதரவாளர்கள் அதிமுக கரை வேட்டி கட்டுவது தொடர்பாக அமைச்சர் மணிகண்டன் பேசியதற்கு டிடிவி தினகரன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக விமர்சித்தது தொடர்பாகவும் மற்றொரு அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த 2 வழக்குகளும் இன்று ஆட்சியார் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்குகளின் விசாரணைக்காக டிடிவி தினகரன் நீதிபதி ஷாந்தி முன்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவதூறு வழக்கு குறித்து டிடிவி தினகரன் முன்பு நீதிபதி வாசித்து காண்பித்தார். இதற்கு பதில் அளிக்க தினகரன், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக கூறினார். டிடிவி தினகரனின் கருத்தை பதிவுச் செய்த நீதிபதி,2 வழக்குகளின் விசாரணையையும் வரும் மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Diwali Dinakaran ,politicians , DTV Dinakaran, defamation, suits, politics, vandalism
× RELATED ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள்