×

5 மாதத்துக்குள் 2 முறை விபத்து : சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் பறக்க தடை

புதுடெல்லி: எத்தியோப்பிய விமான விபத்தை அடுத்து ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா அரசுகள் நிறுத்தியுள்ளது. இரண்டு ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள், 5 மாதத்துக்குள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்து

எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்யா தலைநகர் நைரோபி சென்ற  எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இதில்  157 பேர் பலியாயினர். அதன் கருப்பு பெட்டி நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல், இந்தோனேஷியாவின் லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். 2 விமானங்களும் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தை  சந்தித்துள்ளன. ஒரே மாதிரியான விபத்து என்பதால், விமானத்தின் வேகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் பறக்க தடை

இந்த விபத்தையடுத்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனம் அனைத்து ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை தரையிறக்கியுள்ளது. இரண்டு ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள், 5 மாதத்துக்குள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதை அடுத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வரை போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க வேண்டாம் என உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா, இந்தோனேஷியா உத்தரவிட்டன.

இந்தியாவும் தீவிர பரிசீலனை ..

இந்நிலையில் ‘போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இந்தியாவில் இயக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம், விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்துடன் நேற்று ஆலோசனை  நடத்தியது. இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பெஸ் ஜெட் நிறுவனங்கள் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் சிலவற்றை இயக்குகின்றன.

அதனால் இந்த நிறுவனங்களிடம் விமானத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை இயக்க விமானிக்கு குறைந்தது ஆயிரம் மணி நேரம் அனுபவம் வேண்டும் என்றும் துணை விமானிக்கு 500 மணி நேரம் அனுபவம் வேண்டும் என்றும் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா அரசுகள் தடை


இந்நிலையில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை தரையிறக்க சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா அரசுகள் தடை செய்துள்ளது. இதனிடையே எத்தியோப்பிய விபத்து குறித்து போயிங் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில்,விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்,  ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு புதிய வழிக்காட்டுதல்கள் எதுவும் வழங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : flights ,Singapore , Singapore, Australia, ban, flights, Boeing 737 Max 8'Ethopia
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...