கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே எழுந்தூரில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.11.63 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி காரில் பணத்தை கொண்டு சென்ற ராஜேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் நெல்லை மாவட்டத்திலும் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி