×

காதோடு... 3 கோடியாம்ப்பு...

அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் மண்டல பொறுப்பாளர்களிடம் 3 கோடி கொடுக்க வேண்டும் என்று அக்கட்சி தலைமை உத்தரவிட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் நபருக்கு 3 கோடியுடன் சேர்த்து கட்சி சார்பில் கூடுதலாக செலவுக்கு பணம் தரப்படும் என்றும், தேர்வு செய்யப்படாதவர்களிடம் 3 கோடி திருப்பி தரப்படும் என்று அக்கட்சி தலைமை கூறியுள்ளது. இதனால், நமக்கு சீட் கிடைக்காத பட்சத்தில் கொடுத்த பணம் திரும்ப கிடைக்குமா என்று கட்சியினர் பதற்றத்தில் உள்ளனர். இதனாலேயே பலர் எதற்கு தேவையில்லாமல் பணம் கொடுத்து சீட் கிடைக்கா விட்டால் என்ன செய்வது என்று போட்டியிட விருப்பம் இருந்தும் பணம் திரும்ப கிடைக்குமா என்ற சந்ேதகத்தில் பின்வாங்கி விட்டதாக கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 3 crore
× RELATED பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்தை...