×

இங்கே நேர்காணல் அங்கே பிரசாரம்... அதிமுகவில்தான் இந்த கூத்து

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் நேற்று முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் நேர்காணல் நடத்தினர். ஆனால் வேலூர் மக்களவை தொகுதியிலும், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியிலும் வேட்பாளர் பெயர் அறிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. அதில், ‘வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் குடியாத்தம் நகர அதிமுக செயலாளர் ஜே.கே.என்.பழனியும், குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நகர துணைச் செயலாளரும், முன்னான் கவுன்சிலருமான கஸ்பா ஆர்.மூர்த்தியும் போட்டியிடுவதாகவும் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்ற வாசகங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவிக்கும் முன்பே கட்சியினர்  வேட்பாளர் பெயரை உறுதி செய்து நோட்டீஸ்களை அச்சிட்டதும், போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டியதும் குடியாத்தம் நகரில் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : interview ,campaign , Here is the interview,best thing
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...