×

மயக்க மருந்து கொடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம்: கணவன், மனைவி கைது

ஆவடி: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை  பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர். ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்தவர் கோபி (49). இவரது மனைவி விஜயலட்சுமி (43)  இருவரும் கூலிதொழிலாளிகள். இவர்களது வீட்டு அருகில் வசிக்கும் சிறுமி செல்வி  (13).  (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அதே பகுதியில்  உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் விஜயலட்சுமி, சிறுமியை வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர், அவருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்துள்ளார்.     அதன் பிறகு, விஜயலட்சுமியின் கணவர் கோபி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை சிறுமி சமீபத்தில் அக்கம் பக்கத்தினரிடம்  கூறியுள்ளார். இதனையடுத்து, இந்த தகவலை அவர்கள்  சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியினரை அழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.  விசாரணையில், தம்பதியினர். சிறுமிக்கு பலமுறை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பலரிடம் தகாத உறவில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.  பின்னர், போலீசார் கோபி, அவரது மனைவி விஜயலட்சுமி இருவரையும்  கைது  செய்தனர்.   பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தம்பதியினரை விரைவில் காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு, இந்த  வழக்கில் பலரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rape , anesthesia, Girl, raped , husband ,wife
× RELATED புதுச்சேரியில் கொடூரம்: பாலியல்...