×

மயிலாப்பூர் லஸ் கார்னர் வழித்தடத்தில் இரவு நேரங்களில் பேருந்து சேவை குறைப்பு: பயணிகள் கடும் அவதி

சென்னை: மயிலாப்பூர் லஸ் கார்னர் வழித்தடத்தில் இரவு நேரங்களில் பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சென்னை மயிலாப்பூரில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இந்த வழித்தடம் வழியாக அண்ணா சதுக்கம்,  திருவான்மியூர், பெசன்ட் நகர், அடையாறு, கிண்டி, தாம்பரம், தி.நகர், சென்ட்ரல், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சமீப காலமாக மேற்கண்ட வழித்தடத்தில் இரவு நேரங்களில் மாநகர பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, லஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் கோயம்பேடு பேருந்து நிலையம், கிண்டி, கே.கே.நகர், கிண்டி, தாம்பரம் பகுதிகளுக்கு செல்லும் தடம் எண்கள் 12பி, 12ஜி, 45பி, 21ஜி ஆகிய  பேருந்துகள் போதிய அளவு இயக்கப்படாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வேளச்சேரி, தரமணி, பெருங்குடி ஆகிய பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் அலுவலக பணியை முடித்து ரயிலை பிடித்து, 10.30 மணிக்கு அவசர அவசரமாக லஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தை வரும் பொதுமக்கள், அங்கு நீண்ட  நேரம் கால் கடுக்க காத்து கிடந்தாலும் பேருந்துகள் வருவதில்லை.

இரவு நேரம் என்பதால், குடும்பத்துடன் பெண்களை அழைத்து வரும் பயணிகளோ ஏதாவது ஒரு பேருந்து வந்துவிடாதா என்ற ஏக்கத்துடன் காத்து கிடக்கும் நிலைமை நிலவுகிறது. பின்னர், வேறு வழியின்றி ஷேர் ஆட்டோக்களில்  செல்ல வேண்டியுள்ளது.
இங்கிருந்து ஷேர் ஆட்டோவில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல ஒருவருக்கு ₹40 கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் ஷேர் ஆட்டோவில் செல்லும் குடும்பத்தினர் ஒரு தொகையை கொடுக்க வேண்டிய  சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள், ‘லாப நோக்கத்தை பார்க்காமல், பயணிகள் நலன் கருதி இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்’ என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Passengers ,Mylapore las Karnar , Mylapore ,Luz Corner, Reduced, bus service , night
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...