×

செல்போனில் பாலியல் தொல்லை தருகிறார்: கன்னட நடிகர் மீது நடிகை விஜயலட்சுமி புகார்

பெங்களூரு: செல்போனில் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி கன்னட நடிகர்  ரவிபிரகாஷ் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்று நடிகை விஜயலட்சுமி  போலீசில் புகார் அளித்துள்ளார். கன்னடம் மற்றும் தமிழ் படங்களில்  நடித்து வருபவர் நடிகை விஜயலட்சுமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்  நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார்.  இவர் தனது மருத்துவ செலவுக்கு பணமில்லை என்பதால்  உதவும்படி திரையுலகத்தினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து  இவரது மருத்துவ சிகிச்சை செலவுக்கு கன்னட நடிகர், நடிகைகள் தாராளமாக பண  உதவி  செய்து வருகின்றனர்.

இவரது சிகிச்சைக்கு கன்னட நடிகர்  ரவிபிரகாஷூம் ₹1 லட்சம் கொடுத்து உதவி செய்தார். மேலும் விஜயலட்சுமியை  சந்தித்து நலம் விசாரித்து சென்றார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி இவர்  மீது பெங்களூரு  புட்டேனஹள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த  புகாரில், ‘‘மருத்துவமனைக்கு வந்து எனக்கு பண  உதவி செய்த நடிகர்  ரவிபிரகாஷ், செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு  ஆபாசமாக பேசுகிறார். மேலும் குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுக்கிறார்’’   என்று விஜயலட்சுமி கூறியுள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நடிகர் ரவிபிரகாஷ் கூறுகையில், ‘‘நடிகை விஜயலட்சுமிக்கு நான் எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. அவர்  பொய் புகார் அளித்துள்ளார்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayalakshmi ,actor ,Kannada , Actress Vijayalakshmi, complains ,Kannada actor
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...