×

அதுக்காகத்தான்யா... சுட்டுட்டு வந்திருக்காங்க...: பரூக் அப்துல்லா பகீர்

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடாளுமன்றத்தில், பல விஷயங்களில் பா.ஜ தோல்வியடைந்தது எல்லோருக்கும் தெரியும். அதனால் பாகிஸ்தானுடன் சிறிய அளவிலான போரில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் பிரதமர் மோடி, புது அவதாரமாக உருவெடுக்க முடியும் என நினைத்தார்கள். இதனால் தேர்தலுக்காவே, பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நாம் பல கோடி மதிப்புள்ள விமானத்தை இழந்தோம். நல்ல வேளை பைலட் தப்பிவிட்டார். அவரை பாகிஸ்தான் மரியாதையுடன் திருப்பி அனுப்பிவிட்டது.  பிரதமர் மோடிக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். அவரோ, நானோ இல்லையென்றாலும், இந்தியா வாழும், முன்னேறும். இங்கு போரே ஏற்படாது. உலகமே கண்காணித்து கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மூத்த அதிகாரியை இந்த அரசு பயன்படுத்துகிறது.

பலரை முந்திக்கொண்டு பதவிக்கு வந்த அந்த அதிகாரி, பா.ஜ உத்தரவுக்கு ஏற்ப ஆடுகிறார். மோடி இல்லையென்றால் எதுவும் நடக்காது என்ற அச்சுறுத்தலான சூழலை அவர்கள் உருவாக்குகின்றனர். அவர் கடவுள் இல்லை.
காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுடன் பேசுவதை தவிர வேறு வழியில்லை. காஷ்மீரை உலக நாடுகளின் கவனத்துக்கு மத்திய அரசு கொண்டு வந்து விட்டது. இந்த விவகாரம் குறித்து இந்தியா-பாகிஸ்தான் பேச வேண்டும் என பலநாடுகள் கூறுகின்றன. அதனால் காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தானுடன் பேசுவதுதான் ஒரே வழி. காஷ்மீரில் ஏதோ குறும்பு செய்ய மத்திய அரசு நினைக்கிறது. அதனால்தான் அங்கு சட்டப்பேரவை தேர்தல் தாமதப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Farooq Abdullah Bhagir , Farooq Abdullah,
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...