×

குழந்தைகளுடன் பேசிய தாய் கழுத்து நெரித்துக்கொலை: கள்ளக்காதலன் வெறிச்செயல்

சித்தூர்: தான் பெற்ற குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்த தாய் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர்  அடுத்த  சென்னம்மா  குடிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா(47). இவரது மனைவி கனகதுர்கா(45). இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  ரோகித்(17) என்ற மகனும், ஜெயஸ்ரீ(16) என்ற மகளும் உள்ளனர்.  இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தியாகராஜ் என்பவருக்கும் கனகதுர்காவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இதையறிந்த ஹரிகிருஷ்ணா, மனைவி கனகதுர்காவை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளத்தொடர்பு நீடித்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ஹரிகிருஷ்ணா தனது மகள் மற்றும் மகனுடன் அதே கிராமத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். கனகதுர்கா அதே கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று  கனகதுர்கா  தனது குழந்தைகளிடம் பேசி கொண்டிருந்தாராம். இதைப் பார்த்த கள்ளக்காதலன்  தியாகராஜன், ‘அங்கு என்ன உனக்கு பேச்சு’ என்று கனகதுர்காவை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தியாகராஜன், கனகதுர்காவை வீட்டிற்கு அழைத்து வந்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் மது அருந்திவிட்டு கனகதுர்காவை அவர் அணிந்திருந்த சேலையால் கழுத்தை இறுக்கி  கொலை செய்துள்ளார். பின்னர் கனகதுர்காவின் தாயிடம் சென்று அவளைக் கொன்றுவிட்டேன் என்று கூறிவிட்டு தலைமறைவானார். இதைகேட்ட அவர் கதறி அழுதார்.
இதுகுறித்த தகவலின்பேரில் சித்தூர் முதலாவது காவல் நிலைய டிஎஸ்பி ராம்ஆஞ்சநேயலு, இன்ஸ்பெக்டர் தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  வழக்குப்பதிந்து தலைமறைவான தியாகராஜனை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Baby, mother, neck strangulation, thief
× RELATED தகாத உறவு காதலியின் கணவர் கொலை அதிமுக பஞ்சாயத்து தலைவர் கைது