×

பொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைதான ஏ.நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கம்

சென்னை: பொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைதான ஏ.நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் தொடர்புடைய நாகராஜை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி அறிவித்துள்ளனர். பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக சிலர் கைதாகியுள்ளனர். போலீசில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக நாகராஜ் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Removal ,commander ,Nagaraj High ,Pollachi , Pollachi, Sexual complaint, A. Nagaraj, AIADMK
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...