×

போலீஸ்காரருக்கு அடி, உதை வாலிபர் கைது

அண்ணாநகர்: வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்கம் அருகே போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.செம்பியம் காவல் நிலையத்தில் போக்குவரத்து எஸ்.ஐயாக இருப்பவர் குமார் (57). இவர், நேற்று மாலை வில்லிவாக்கம், நாதமுனி திரையரங்கம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தபோது அவர் மது அருந்தி இருந்தது தெரிந்தது. இதுகுறித்து எஸ்.ஐ குமார் அவரிடம் கேட்டபோது, ஆத்திரம் அடைந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டு பைக்  சாவியால் காவலர் முகத்தில் குத்தினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வாலிபரை பிடித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் காவலர் குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து அம்பத்தூர் கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜோசப் (36) என்ற வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : policeman , Blow,policeman, kick, Young man, arrested
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...