×

களியக்காவிளை அருகே பா.ஜ.க. - மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மோதல்

களியக்காவிளை:  கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கண்ணுமாமூடு கேரள பகுதியில் நேற்று முன்தினம் பா.ஜ.வினருக்கும் மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் 2 ேபருக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளில் சம்பவத்தில் ெதாடர்புடைய ஒரு பா.ஜ. பிரமுகர் களியக்காவிளை அடுத்த கோழிவிளை பகுதியில் ஒரு கடைக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார். இதை கவனித்த கோழிவிளையை சேர்ந்த மார்க்சிஸ்ட் நிர்வாகி ஒருவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் ஆதரவாக அப்பகுதி கட்சியினர் திரண்டனர். சில நிமிடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கும்பலும் மாறி மாறி கல்வீச்சில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அப்பகுதியில் ஒரு துணிக்கடை, பலசரக்கு கடை உட்பட 6 கடைகள் சூறையாடப்பட்டன.  தகவல் அறிந்த பாறசாலை போலீசார் சம்பவ இடம் விரைந்து தடியடி நடத்தி இரு கும்பலையும் கலைந்து போக செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : volunteers ,Marxist , kaliakavilai BJP ,Marxist,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...