சென்னை: சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம் இடையே 8 ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை-திருமால்பூர் வரை இயக்கப்பட்டு இருந்த (40705, 40707, 40907) ஆகிய மின்சார ரயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதைப்போன்று திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்பட்டுள்ள ( 40712, 40702, 40706) ஆகிய ரயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் வரை இயக்கப்பட்டு வந்த (40803) திருமால்பூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை வரை இயக்கப்பட்டு வந்த ரயில் (40804) திருமால்பூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி