×

சாவுக்கும் வரலே... கத்தி கதறும் போதும் வரலே... ஓட்டு கேட்க மட்டும் வர்றாங்கடா...சீமான் காட்டமான பேச்சு

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:  ஓட்டு கேட்டு வருகிறார் ஐயா மோடி. அவருக்கு ஒருத்தர் விடாம ஒட்டு போட்டுட்டு தான் மறுவேளை பார்க்க வேண்டும். ஒரு மானம் கெட்ட கூட்டம். சாவுக்கும் வரல. கத்தி கதறும் போதும் வரல. வெட்கம் கெட்டு, மானம் கெட்டு, ஓட்டு பிச்சை கேட்டு மானம் இல்லாம, தமிழ் மக்களிடம் நிக்கிறாங்க. இதுக்கு ஒரு கட்சி, ஒரு ஆட்சி. வாக்கு இயந்திரத்தை ‘ஹேக்’ செய்து தான் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்துச்சு. இதற்கு ஒருத்தனும் பதில் பேசவில்லை. லயோலா கல்லூரிக்கு எதிரா அப்புறம் ஆர்ப்பாட்டம் பண்ணுங்கடா.. இதுக்கு பதில் சொல்லுங்கடா. வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து தான் மோடி பிரதமர் ஆனார். இதற்கு பதில் இருக்கா? மறுப்பு இருக்கா? இதை யார் சொன்னது?.

  இப்போ கூட்டணிக்கு கூட நாங்கள் தயார் என்று சொல்கிறார்கள். கொலை நடுங்குது... ஏன்னா மோடிக்கு பயம் வந்து விட்டது. முதலில் மோடியின் நடை எப்படி இருந்தது. இப்போது நடை எப்படி உள்ளது என்பதை பார்த்தீர்களா?. மார்ச் மாதம்  தரையில்  படுத்து அங்க பிரசங்கம் உருளுவதை போல உருண்டு போனார். மோடி அத்வானியை முதலில் கும்பிட்ட கும்பிட்டை நீங்கள் பார்க்கவில்லை. காலை தொட்டு, தொட்டு பேசினார்... அவரும் நல்ல பையனா இருக்கிறானே... பரவாயில்லை. இந்த பையன் தான் குஜராத்துல முதல்வரா இருக்கானா...ன்னு நம்பினார். ஆனால் இப்போது அத்வானி கும்பிட்டு இருக்காரு, மோடி எப்படி போகிறார் என்பது தெரியுமா?

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death , Seeman
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு