×

சென்னை பட்டாலியன் போலீஸ்காரர் கொலை

தேனி : தேனி புதிய பஸ்நிலையம் அருகே கொலையான போலீஸ்காரர் உடல் கிணற்றில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி புதிய பஸ்நிலையம் அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம்  ஒரு கிணற்றில்  சடலம் கிடப்பதாக நேற்று மாலை தேனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டனர். அப்போது சடலம் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. இறந்து கிடந்தவரின் பையை சோதனை செய்தனர். சோதனையில் இறந்தவர் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை கிராமத்தை சேர்ந்த ராமர்(25) என்பதும், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதும் தெரிய வந்ததது. இவர் சென்னை ஆவடியில் பட்டாலியன் போலீசாக பணிபுரிவது தெரிய வந்தது. இறந்த போலீஸ்காரர் ராமரை யார் கொலை செய்தனர் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,battalion policeman ,Chennai , Murder ,Chennai battalion policeman
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...