×

ஜார்க்கண்டில் கார்- லாரி மோதல் : 10 பேர் பலி

ராம்கர்: ஜார்க்கண்டில் காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர். பீகார் மாநிலம், அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ராஞ்சிக்கு காரில் சென்றனர். நேற்று அதிகாலை, ராம்கர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கார் வேகமாக சென்றது. பெங்கி என்ற கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jharkhand , Car-truck collision , Jharkhand, 10 killed
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...