×

ஆஸி.,-க்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் : தோனி அவுட், ரிஷப் பண்ட் இன்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில், இந்திய அணி வீரர் மகேந்திர சிங் தோனி விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடிவருகிறது.  டி20 தொடரை இந்தியா இழந்த நிலையில், 3 ஒருநாள் போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. ராஞ்சியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  

இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிகளில் ஓய்வு காரணமாக தோனி விளையாடமாட்டார் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். தோனி விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக களமிறங்கவுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது கடைசி 2 போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். தோனி இந்த 2 போட்டியிலும் விளையாடமாட்டார். அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தோனி  இடத்தில் ரி‌ஷப் பண்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் அனுபவத்துக்காக ரி‌ஷப் பண்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதே போல முகமது ‌ஷமி காயம் அடைந்ததால் அவர் இடத்தில் புவனேஷ்வர்குமார் களம் இறங்குவார். தவான் இடத்தில் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறினார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : matches ,Aussie ,Dhoni ,Rishabhunta , Australia, India, Dhoni Retirement, Rishabh Band
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி