ஈரோடு: சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முகிலனின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கடந்த 2 நாட்களாக முகாமிட்ட சிபிசிஐடி போலீசார், முகிலனின் குடும்பத்தினர், அவரது தொடர்பில் இருந்து வந்த தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் உள்ளிட்ட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தினர். முகிலன் மாயமாவதற்கு முன்பாக யார் யாரிடம் தொடர்பில் இருந்தார். அவருடன் இணைந்து சமூகப்பணி செய்தவர்கள் பட்டியல், முகிலன் இதுவரை முன்னின்று நடத்திய போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி