சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடிகை கோவை சரளா இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மகளிர் தின விழா சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது நடிகை கோவை சரளா கலந்துகொண்டு, கட்சியில் இணைந்தார். இதுகுறித்து கமல் கூறும்போது, ‘மக்கள் நீதி மய்யத்தில் கோவை சரளா இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. பெண்களின் ஆதரவு கட்சிக்கு அதிகரித்து வருகிறது. வேட்பாளர் தமிழன் என்பதாலேயே ஓட்டு போட வேண்டும் என்பதில்லை. திறமையானவரா என்பதை தெரிந்து ஓட்டு போடுங்கள். தமிழனாக இருந்தும் திறமையில்லையென்றால் அவருக்கு ஓட்டு போடக்கூடாது’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி