புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக 24 மாநிலங்களில் இருந்து 53 தொகுதிகளை கண்டறிந்துள்ளது. இதில், 15 தொகுதிகளுக்கான முதல்வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா கூறுகையில், ‘‘ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது முடிந்ததும் கண்ணையா குமாருக்கு அழைப்பு விடுப்போம். பீகார் மாநில இந்திய .கம்யூனிஸ்ட் கண்ணையா குமாருக்கான தொகுதியை அடையாளம் கண்டறிந்ததும் அது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்’’ என்றார். கண்ணையா குமாருக்காக பெகுசாராய் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி