×

திருச்சியில் கொடிகட்டி பறக்கும் ஹைடெக் விபசாரம் : தூங்கும் விபசார தடுப்பு பிரிவு போலீஸ்

திருச்சி: திருச்சியில் ஹைடெக் முறையில் விபசாரம் களைகட்டி உள்ளது. வாட்ஸ் அப் மூலம் அழகிகள் படங்களை தேர்தெடுத்து அனுப்பினால், ரூம் தேடி அழகிகள் வருகின்றனர். தமிழகத்தில் விபசார தடுப்பு  காவல் பிரிவு  செயல்படுகிறது. விபசாரத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை தடுப்பது தான் இந்த பிரிவின் செயல்பாடு. ஆனாலும் முக்கிய நகரங்களில் விபசாரம் பல்வேறு பரிணாம வளர்ச்சியுடன் இன்று நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் போலீசார் அதனையும் கண்டுபிடித்து   நடவடிக்கை எடுத்து தான் வருகிறார்கள்.

விபசார வழக்குகளில் கைது செய்யப்படும் இளம்பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர், அவர்களை யாரேனும் ஜாமீனில் வெளியே அழைத்து சென்று விடுகின்றனர். வெளியே சென்ற பெண்கள் மீண்டும் திருந்தி தங்கள் வீடுகளுக்கு சென்று குடும்பத்தோடு வாழ நினைத்தாலும் ஏனோ இந்த சமூகம் அவர்களை திருந்த விடுவதில்லை. இதனால்  மீண்டும் அதே தொழிலில் வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர்.

செல்போன்கள் புழக்கத்தில் இல்லாத காலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விபசாரம் நடப்பது வழக்கம். கடந்த காலங்களில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் விபசாரம் கொடி கட்டி பறந்தது. பின், கால மாற்றத்திற்கேற்ப வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் அடுத்து கட்டத்திற்கு முன்னேறியது. ஆடம்பர பங்களாக்களை   வாடகைக்கு எடுத்து அதில் வெளிமாநில அழகிகளை கொண்டு  வந்து விபசார தொழில் நடந்து வந்தது. இதில் ஒரு சில நேரங்களில் அந்த பகுதிகளில் அறிமுகம் இல்லாத ஆண்களின் நடமாட்டம் அதிகளவில் இருந்தால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளித்து சிக்க வைத்து வருகின்றனர்.
ஒருசில இடங்களில் ஆம்னி காரில் இளம்பெண்களை கொண்டு ஹைடெக் முறையில் விபசாரம் நடந்து வருகிறது. ஆனாலும் கால மாற்றத்தில் இதுபோன்றவைகள் அதிகம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தற்போது திருச்சியில் ஹைடெக் முறையில் வெளிமாநில இளம்பெண்களை கொண்டு விபசாரம் அரங்கேறி வருகிறது.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் ஆடம்பர வீடுகளை வாடகைக்கு எடுத்து  விபசாரம் அரங்கேறி வருகிறது. இளம்பெண்களை முதலில் மாடர்ன் உடை அணிய வைத்து அதனை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் கஸ்டமர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதில் அழகிகளுக்கு ரோஜா, மல்லிகை, தாமரை, முல்லை என கவர்ச்சிகரமான பெயர்கள் வைக்கிறார்கள். சில நேரங்களில் அழகிகளுக்கு 1, 2, 3 என எண்களும் கொடுக்கப்படுகிறது.நமக்கு விருப்பமான மலர், அல்லது எண்களை குறிப்பிட்டு அனுப்பி விட்டால் நமக்கான ட்ரீட்மென்ட் அப்பாயின்மென்ட் நேரம் ஒதுக்கப்படும். இந்த இன்ப சிகிச்சை குறைந்தபட்சம் 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம், 6 மணி நேரம், அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை உள்ளது. நேரத்திற்கு தகுந்தாற்போல கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 படங்களில் உள்ள அழகிகளை பார்த்து அதன் மூலம் ஈர்க்கப்படும் சபல ஆண்கள் அங்கு சென்று  அதற்கான கட்டணத்தை செலுத்தி உல்லாசம் அனுபவிக்கின்றனர். இதற்கான குறைந்தபட்ச கட்டணம் ₹2 ஆயிரம் ஆகும். தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறைஅழகிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் புதிய அழகிகள் கிடைக்காவிட்டால் உடைகளை மாற்றி அழகிகளை வித்தியாசப்படுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றி அழைப்பதும் உண்டு. இப்படி ஏமாந்த வாடிக்கையாளர்கள் சிகிச்சை முடிந்து திரும்பும்போது ஏமாற்றத்தை வெளியே சொல்வது இல்லை.சில நேரங்களில் புரோக்கர்களிடம் மனக்குமுறலை கொட்டுகிறார்கள். அடுத்த முறை பெங்களூரு பார்ட்டி வருது. உங்களுக்கு தான் முதல் சிகிச்சை என தேற்றி அனுப்பி வைக்கிறார்கள். இப்படி  தொய்வின்றி கஸ்டமர்களுக்கு சிறப்பான சேவையை செய்து வருகின்றனர். இதுகுறி த்து காவல்துறை நடவடிக்கை எடுத்து இளம் சமுதாயத்தினரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பஸ் நிலையத்தில் புரோக்கர்கள்
கடந்த சில ஆண்டுக்கு முன் கருமண்டபம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்ட வீட்டில் இரவு பகல் என ஆண்கள் வாகனங்களில் வந்து சென்றதை பார்த்த அப்பகுதிகள் மக்கள் போலீசுக்கு புகார் அளித்தனர். போலீசார் ரகசியமாக கண்காணித்து பொறி வைத்து அழகிகளை பிடித்தனர். இதில் மத்திய பஸ் நிலையத்தில் நிற்கும் புரோக்கர்கள் வெளியூர் நபர்களை கண்டறிந்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து தொழிலை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

கண்டுகொள்ளாத போலீஸ்

 உறையூர் பகுதியில் உள்ள வீட்டில் அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாக விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு போன் மூலம் புகார் சென்றது. அப்போது போனை எடுத்து பேசிய பெண் போலீஸ், யார் வீட்டில் என்ன நடந்தா உனக்கு என்னா?, உன் வீட்டில் நடக்கவில்லை அல்லவா என் வேலையை  போய் வேலைய பாரு என அதட்டலுடன் தொடர்பை துண்டித்து விசுவாசத்தை காட்டினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trichy , Trichy, adolescence in hi-tech mode
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...