சென்னை: கருணாநிதியை சந்திக்க ஸ்டாலின் அனுமதி மறுத்ததாக திரும்ப திரும்ப பொய் கூறி வருகிறார் பிரேமலதா என திமுகவின் சந்திரகுமார் குற்றம் கூறியுள்ளார். பிரேமலதா விஜயகாந்த் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல பேசி, பத்திரிகையாளர்களை கேவலப்படுத்துகிறார் என புகார் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியது அரசியல் நாகரீகமற்ற தன்மையை காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி