×

காட்பாடியில் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு தேமுதிகவினர் போராட்டம் : 50 பேர் கைது

சென்னை : திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தை முற்றுகையிட்டு தேமுதிக கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ரகசியமாக துரைமுருகன் மூலமாக திமுகவுடனும், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக துரைமுருகன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தேமுதிக மூத்த நிர்வாகி சுதீஷ்சும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் என கூறியிருந்தார். முன்னதாக தேமுதிக கேட்ட தொகுதிகளை கொடுக்காமல், விருப்பமில்லாத தொகுதிகளை ஒதுக்க அதிமுக முயற்சி செய்து வந்தது.

இதனால் அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்நிலையில் தேமுதினவினர், திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய தகவல் வெளியானதால், அதிமுகவும் தேமுதிகவினருக்கான கூட்டணி கதவை அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோபம் அடைந்த தேமுதிகவினர் இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகன் இல்லத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

கையில் கருப்புக் கொடிகள் மற்றும் தங்கள் கட்சி கொடிகளுடன் தேமுதினவினர் திரளாக வந்த நிலையில், போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர். இதனால் கோபமடைந்த தேமுதிக தொண்டர்கள், காட்பாடி- சித்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. துரைமுருகனுக்கு எதிராக தேமுதிகவினர் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dumyumugunal ,house ,Dumyuikavar ,Katpadi , Katpadi, Duramurugan House, Siege Struggle, Dhamtika, Arrested
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்