சென்னை : திருவாரூரில் 5க்கும் மேற்பட்ட சிலைகள் மாற்றப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார். முக்கியமான இடங்களில் சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாற்றப்பட்ட சிலைகள் வெளிநாட்டில் இருக்கிறதா என்பதை ஆராய உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இணைஆணையர் தென்னரசு இதுவரை ஆய்வில் பங்கேற்கவில்லை என பொன்.மாணிக்கவேல் தகவல் அளித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி