×

ஏற்காட்டில் சாலை அமைக்க வலியுறுத்தி 17 கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை

சேலம்: ஏற்காட்டில் சாலை அமைக்க வலியுறுத்தி 17 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மண் சாலையை தார் சாலையாக மாற்ற நீண்ட நாளாக கிராமமக்கள் கோரிக்கை விடுத்து அதிகாரிகள் கண்டுக்கொள்ளாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஏற்காடு பேருந்து நிலையம் தொடங்கி வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் 17 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Yercaud , The 17 villagers , setting , road , Yercaud's
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...