×

இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் -இ -முகமது இயக்கத்தை பாக். அரசு பயன்படுத்துகிறது : முன்னாள் அதிபர் முஷாரப் அதிர்ச்சி தகவல்

இஸ்லாமாபாத் : இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காக ஜெய்ஷ் -இ -முகமது இயக்கத்தை பாகிஸ்தான் அரசு பயன்படுத்தியதை அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அம்பலப்படுத்தி இருக்கிறார். பாகிஸ்தான் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அவர், இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் பயன்படுத்துவது வழக்கமாக ஒன்று எனக் கூறியுள்ளார். அந்த வகையில் இந்தியா மீது தாக்குதல் நடத்த பல காலமாக ஜெய்ஷ் -இ -முகமது அமைப்பை பாகிஸ்தான் உளவுத்துறை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

தான் அதிபராக இருந்த போது ஜெய்ஷ் -இ -முகமது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்ததாக முஷாரப் தெரிவித்துள்ளார். இதனிடையே ஜெய்ஷ் -இ -முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் நேற்று ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மசூத் இறந்து விட்டதாக வெளியான தகவலை பொய்யாக்கும் விதமாக வெளியிட்டு இருக்கும் அவர், பிறப்பு மற்றும் இறப்பை கடவுள் தான் முடிவு செய்வார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஜெய்ஷ் -இ -முகமது அமைப்பு மீது பாகிஸ்தான் அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா கொடுக்கும் அழுத்தத்தால் பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மசூத் அசார் தெரிவித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistani ,government ,Jaish-e-Islam ,Musharraf ,India , Jaish-e-Mohammad, attack, Pakistan, Pervez Musharraf
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு