×

40 தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் திமுக அணி வெற்றி பெற வீறுகொண்டு பணியாற்றுவோம்

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களிலும், திமுக தலைமையிலான அணி வெற்றி வாகை சூடுவதற்கு வீறுகொண்டு பணியாற்றுவோம் என்று மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுக 27வது பொதுக்குழு, நேற்று சென்னை, அண்ணா நகர், விஜயா மகாலில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களிலும், திமுக தலைமையிலான அணி வெற்றி வாகை சூடுவதற்கு வீறுகொண்டு பணியாற்றுவோம், தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் மீது வன்மம் பாராட்டி வரும் மோடி தலைமையிலான பாஜ அரசு மீண்டும் மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வருவது இந்திய ஜனநாயகத்திற்கே பெரும் ஆபத்தாக முடியும். எனவே, பாஜ ஆட்சியைத் தூக்கி எறியவும், மத்திய அரசுக்கு அடிமைச் சேவகம் புரியும் அதிமுக அரசை வீழ்த்தவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியை ஆதரித்து, மகத்தான வரலாற்று மாற்றத்திற்கு வித்திடும் வகையில் வாக்கு அளிக்க வேண்டும், 22 ஆண்டு காலம் சோர்வின்றிப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றும், நீதிமன்றங்களில் நேர்நின்று வழக்காடியும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறப்பதற்குத் தடை ஆணை பெற்ற வைகோவிற்கு மதிமுகவின் 27வது பொதுக்குழு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வாறு பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituencies ,Lok Sabha ,team ,DMK , 40 constituencies , 21 Lok Sabha constituencies, DMK team
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரைக்காக...