×

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் முதல்கட்ட அரை இறுதியில் இன்று நார்த்ஈஸ்ட் - பெங்களூரு மோதல்

கவுகாத்தி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரை இறுதி சுற்று இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் - பெங்களூரு எப்சி அணிகள் மோதுகின்றன. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 5வது சீசன் லீக் சுற்று மார்ச் 3ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடித்த பெங்களூரு, கோவா, மும்பை, நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. உள்ளூர்/வெளியூர் அடிப்படையில் 2 கட்டமாக நடைபெறும் அரை இறுதியில் பெங்களூரு - நார்த்ஈஸ்ட் யுனைட்டட், கோவா - மும்பை அணிகள் மோதுகின்றன. கவுகாத்தியில் இன்று இரவு நடைபெறும் அரை இறுதி 1 முதல் கட்ட ஆட்டத்தில் பெங்களூரு - நார்த்ஈஸ்ட் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. கடந்த சீசனில் அறிமுகமான பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டு சீசனிலும் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது குறுப்பிடத்தக்கது.

நடப்பு சீசனில் அந்த அணி 18 லீக் ஆட்டங்களில் விளையாடி 10 வெற்றி, 4 டிரா, 4 தோல்வியுடன் 34 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்தது. நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணி முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த அணி 18 ஆட்டங்களில் 7 வெற்றி, 8 டிரா, 3 தோல்விகளுடன் 29 புள்ளிகள் பெற்று 4வது இடத்தை பிடித்தது. லீக் சுற்றில் இந்த அணிகள் 2 முறை மோதியுள்ளன. அதில் கவுகாத்தியில் நடந்த போட்டி 1-1 என்று டிராவில் முடிந்த நிலையில், பெங்களூருவில் நடந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்சி அணி வென்றது. இந்த நிலையில், முதல் கட்ட அரை இறுதியில் மீண்டும் மோதும் இந்த அணிகள் முன்னிலை பெற வரிந்துகட்டுகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : conflict ,North End ,Bengaluru ,ILC Football Series , IL football, North East, Bengaluru, conflict
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்