டெல்லி : அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்களை நியமித்து சமரச பேச்சு நடத்துவது தொடர்பான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அயோத்தி விவகாரத்தில் நடுவரை அமைத்து சமரச பேச்சு நடத்தலாம் என்ற யோசனைக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தையை பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள் என உச்சநீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் வாதம் செய்தனர். அயோத்தி பிரச்சனைக்கு சமரச பேச்சு நடத்த வழக்கில் தொடர்புடையவர்கள் மத்தியஸ்தர்களை பரிந்துரைக்கலாம் என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி