×

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் மணிப்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் மணிப்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து  மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள மணியம்பட்டு கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த 1990-ல் சட்டப் படிப்பை முடித்த  இவர் 2016 ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் மற்றும் அரசியலமைப்பில் சிறந்து விளங்கிய இவர் கடந்த 2 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

மேலும் ஒக்கி மற்றும் கஜா புயல்களில் பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு  உதவிகளைச் செய்துள்ளார். இந்நிலையில், இவரை மணிப்பூர் மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. நீதிபதி எம்.வி.முரளிதரனை மணிப்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவது குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டு இருந்தது. இந்த நிலையில் குடியரசு தலைவர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோரிடம் கலந்தாலோசித்த பின்னர் நீதிபதி முரளிதரனை இடமாற்றம் செய்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MV Muralidaran ,Chennai High Court ,Manipur High Court , Chennai High , MV Muralidaran, transfer , Manipur ,High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...