சென்னை : சென்னை அடையாறு நேப்பியர் பாலம் அருகே ஆளில்லா விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளில்லா விமானம் பறந்ததாக வந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.என்.எஸ் கடற்படை அலுவலகத்தின் மேல் ஆளில்லா விமானம் பறந்ததாக கூறப்படுகிறது. கடற்படை தளத்தை சுற்றி நீண்ட நேரமாக பறந்த ஆளில்லா விமானம் தொடர்ந்து நோட்டம் விட்டதாக கடற்படை அதிகாரி புகார் அளித்துள்ளார்.
இதனிடையே நேற்று இரவு கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆளில்லா குட்டி விமானம் பறந்ததாகவும் 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த விமானம் மறைந்து விட்டதாகவும் புனித ஜார்ஜ் கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், ஆளில்லா விமானம் நோட்டமிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளில்லா விமானம் மூலம் நோட்டமிட்டது யார் என்பது குறித்து கோட்டை காவல்நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி