×

இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக தகுதி நிறுத்தப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக தகுதியை நிறுத்தப் போவதாக அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மதுபானங்கள், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 150 சதவீதம் வரை கடுமையான வரிவிதிப்பதாக அண்மையில் டிரம்ப் புகார் கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்க எம்பிக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், இந்திய சந்தையில் அமெரிக்கப் பொருட்களுக்கு நியாயமான வர்த்தகம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் ஜிஎஸ்பி புரோகிராம் என்ற வளரும் நாடுகளுக்கான சிறப்பு வர்த்தக சலுகைகளை நிறுத்தப் போவது குறித்து இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அமெரிக்க பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது குறித்து இந்தியா எந்தவிதமான உறுதிமொழியையும் அளிக்கவில்லை என்று டிரம்ப் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் இந்தியா மற்றும் துருக்கிக்கான சிறப்பு வர்த்தக தகுதியை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் சுமார் 5.6 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கான வரிச்சலுகைகள் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trump ,India ,US , Chancellor Trump, India, Special Trade Eligibility, Washington
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...