×

தள்ளுபடி விலையில் ஆவின் பன்னீர் இன்று முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை கிடைக்கும்

சென்னை: சிறப்புத் தள்ளுபடி விலையில் இன்று முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை ஆவின் பன்னீர் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுமக்களின் உணவுப்பழக்க வழக்கங்கள் நாளுக்கு நாள் மாறிவரும்  சூழ்நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ‘பன்னீர்’கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை பெரிதும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். பொதுமக்களின் பயன்பாடு மற்றும் தேவைக்கேற்ப தரமான பன்னீரை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  200கிராம் பன்னீர் 10 தள்ளுபடி செய்து, 70 க்கும், 500 கிராம் பன்னீர் 25 தள்ளுபடி செய்து, 175 க்கும், 1 கிலோ பன்னீர்  50 தள்ளுபடி செய்து, 350 என சிறப்புத் தள்ளுபடி விலையில் இன்று முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஆவின் பாலகங்கள், சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aavin Paneer , available ,April 5 till today
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...