×

வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி போலீஸ்காரர் கைது

புழல்: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நடைபாதை கடைகளில் நேற்று முன்தினம் மாலை போலீஸ் உடையில் இருந்த ஒருவர், திடீர் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பயன்படுத்தியதை கண்டுபிடித்தார். பின்னர், சம்மந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு வசூலில் ஈடுபட்டார். தொடர்ந்து, அருகில் உள்ள திரையரங்கில் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதாக மிரட்டி மாமூல் கேட்டுள்ளார். அப்போது, அந்த நபர் மீது திரையரங்க ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இதுபற்றி செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், கும்மிடிப்பூண்டி அடுத்த வில்லாய் காலனி கொண்டாம நல்லூரை சேர்ந்த சபாபதி (24) என்பதும், இவர் போலீஸ் சீருடையை வாடகைக்கு பல்வேறு பகுதிகளில் வியாபாரிகளிடமும், வாகன ஓட்டிகளிடமும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த போலி அடையாள அட்டையையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : policeman , Fake policeman arrested
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...