×

ராஜஸ்தானில் அத்துமீறி நுழைந்த பாக்., ட்ரோன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

பிகானிர்: பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த  பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.  இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் போர் விமானங்களும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றன. இந்திய போர் விமானங்கள் சாதுர்யமாக செயல்பட்டு பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி அடித்தன. இருநாட்டு வான்பகுதியில் ஏற்பட்ட இந்த மோதலின்போது, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் வாகா எல்லை வழியாக இந்தியாவிடம் ஒப்படைத்தது.

இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ஆளில்லா ட்ரோன் உளவு விமானங்கள் பிகானிர் நல் செக்டாரில் அத்துமீறி நுழைந்தன. இந்திய விமானப்படையின்  பாதுகாப்பு ரேடார்கள் இதைக்கண்டுபிடித்தன. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு சொந்தமான உளவு விமானத்தை சுகோய் 30MKI விமானம் கொண்டு இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : intruders ,Rajasthan ,Pakistani , Rajasthan, Pakistan, drone aircraft, Indian Air Force
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ.105 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது