×

ஆஸி.யின் விக்டோரியா பகுதியில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ..... அவசர நிலை எச்சரிக்கை விடுப்பு

விக்டோரியா: ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் வீசும் அனல் காற்றினால் பற்றி எரிந்த காடுகளில் இருந்து வெளியேறும் புகை விண்ணை முட்டும் அளவுக்கு காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருகின்றனர். பலநூறு ஏக்கர் அளவில் இருக்கும் மரங்கள் தீக்கிறையானதை அடுத்து அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் விமானங்கள் மூலம் ரசாயன பொடிகளை தூவி தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

புதருள் தீப்பற்றி எரிவதால் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகள் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புகைமூட்டம் அதிகளவில் காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி வருவதால் தீயை அணைப்பதில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussie ,area ,Victoria ,forest fire , Victoria, bushfire,
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...