சென்னை: சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா(42) கேட்டரிங் நடத்தி வருகிறார். திருச்சி சென்றிருந்த அவர் நேற்று பிற்பகலில் அங்கிருந்து சென்னைக்கு தேஜஸ் ரயிலில் வந்தார். கடந்த 1ம் தேதி பிரதமர் மோடி இந்த ரயிலை தொடங்கி வைத்தார். இந்த ரயில் தாம்பரம் அருகே வந்தபோது கழிவறைக்கு செல்ல புறப்பட்ட சாதிக்பாட்ஷா மீது தகரத்தாலான மேற்கூரை விழுந்தது. அதில் அவருக்கு முதுகு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளை தொடர்புகொண்டு புதிய ரயிலை இவ்வளவு மோசமாகவா வைத்திருப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதிகாரிகள் உரிய பதிலளிக்கவில்லை. தேஜஸ் ரயிலில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றும் இந்த ரயிலில் பெட்டிகள் முறையாக பராமரிக்கபடவில்லை, கழிவறை தூய்மையாக இல்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி