×

பங்காரு அடிகளாரின் 79வது பிறந்தநாள் விழா

சென்னை: பங்காரு அடிகளார் 79வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையோட்டி ஏராளமான பக்தர்கள் வந்து ஆசி பெற்று சென்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 79வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை தனது இல்லத்தில் உள்ள பெற்றோரின் படங்களுக்கு தீபாராதனை காட்டி  வணங்கினார். பின்னர் அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பங்காரு அடிகளார் அமரவைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.

8.15 மணிக்கு சித்தர் பீடம் வந்த அடிகளாருக்கு பக்தர்கள் பாத பூஜை செய்தனர். இதன்பிறகு பிரகாரம் வலம் வந்த அடிகளார், கருவறையிலும் புற்று மண்டபத்திலும் தீபாராதனை காட்டிய பின் அங்கே வைக்கப்பட்டிருந்த பிறந்த  நாள் கேக்கை வெட்டி பக்தர்களுக்கு வழங்கினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது ஆதிபராசக்தி இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார்,  துணைத்தலைவர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், டாக்டர் ரமேஷ், சேலம் தொழிலதிபர் உமாதேவி ஆகியோர் இருந்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : celebration ,birthday ,Bengaluru , celebration , 79th, birthday , Bengaluru
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...