×

தூத்துக்குடியில் போட்டியில்லை யாருடன் சமக கூட்டணி? சரத்குமார் 5ம் தேதி முடிவு

புதுக்கோட்டை: நாடாளுமன்றத் தேர்தலில் சமக யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 5ம் தேதி அறிவிக்க உள்ளதாக சரத்குமார் தெரிவித்தார்.
 நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்று காலை தூத்துக்குடி வாகைக்குளம் வந்த சமக தலைவர் சரத்குமார் அளித்த பேட்டி: நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தொகுதிக்கு ரூ.20 கோடி முதல் 30 கோடி தேவைப்படுவதால் அச்சமாக உள்ளது. மக்களுக்காக சேவை செய்யும் நபர்களை சுதந்திரமாக தேர்வு செய்ய வேண்டும். அன்றுதான் உண்மையான ஜனநாயகம் உருவாகும். அரசியலில் தரக்குறைவாக விமர்சனம் செய்வதும், பின்னர் கூட்டணிக்காக ஒன்று சேருவதும் எப்படி சரியானதாக இருக்க முடியும்.

அவ்வாறு நான் பேசவும் மாட்டேன். சேரவும் மாட்டேன். சமூக வலைதளங்களில் அன்புமணி, ராமதாஸ், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை அன்று- இன்று என்று விமர்சனம் செய்து வருகின்றனர். தூத்துக்குடி தொகுதியில் நான் போட்டியிடப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில்  சமக யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 5ம் தேதி (நாளை மறுதினம்) அறிவிப்பேன். அதிமுக, தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தமிழகத்தில் பாஜ காலூன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi ,Sarath Kumar , Tuticorin,Sarath Kumar
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...