×

மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.55.58லட்சம்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணப்பட்டது, இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை ரூ.55.58லட்சம் இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியிடங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.

 இதற்கு, மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் மற்றும்  தன்னார்வலர்கள் பலர் பங்கேற்று  உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.  கோயில் வளாகத்தில் உள்ள மொத்தம் 22 பொது உண்டியல் மற்றும் 9 தட்டுக்காணிக்கை உண்டியல்களில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டது. பொது உண்டியலில் ரூ. 44 லட்சத்து 2 ஆயிரத்து 271ம், தட்டு காணிக்கை உண்டியலில் ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்து 859ம் என மொத்தம் ரூ.55லட்சத்து 58ஆயிரத்து 130இருந்தது. என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Masanniyamman , Masaniyamman temple , pollachi, festival, Hyundiyal
× RELATED அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு