×

அபிநந்தன் இந்தியா வருகை மாடம்பாக்கம் மக்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம்

சென்னை: அபிநந்தன் இந்தியாவிற்கு திரும்பியதை தொடர்ந்து, அவரது பெற்றோர் வசிக்கும் மாடம்பாக்கத்தில் உள்ள பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானி அபிநந்தன் நேற்று விடுவிக்கப்பட்டு மாலை வாகா எல்லை வந்தடைந்தார். பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் இந்திய விமான படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது, இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அபிநந்தன் பெற்றோர் வசிக்கும் சென்னை, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் மாடம்பாக்கம் 14வது வார்டு முன்னாள் கவுன்சிலரும் அபிநந்தன் குடும்பத்தின் நெருங்கிய நண்பருமான திமுகவை சேர்ந்த எல்.எஸ்.எஸ்.மோகன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தேசிய கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abhinandan India ,Madambakkam , Abhinanthan, India, Madambakkam people
× RELATED சென்னை அருகே வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல்