×

காதலியை பார்க்க நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்ததால் திருடன் என நினைத்து வாலிபருக்கு அடி உதை: மாம்பலத்தில் பரபரப்பு

சென்னை: காதலியை பார்க்க நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த வாலிபரை, திருடன் என நினைத்து பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் மேற்கு மாம்பலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மேற்கு மாம்பலம் புது தெருவை சேர்ந்தவர் சங்கர் (29). பெயின்டர். இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு கடந்த 4 நாட்களாக சுண்ணாம்பு அடிக்கும் பணி செய்து வந்தார். அப்போது, அந்த வீட்டில் உள்ள இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரது செல்போன் எண்ணை வாங்கிய சங்கர், அடிக்கடி போன் செய்து காதலிப்பதாக தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண் சங்கரின் காதலை ஏற்கவில்லை. மேலும், எனக்கு போன் செய்ய வேண்டாம் என்று கூறி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சங்கர் நேற்று அதிகாலை 3 மணி அளவில், அந்த பெண் வீட்டிற்குள் புகுந்து பேச முயன்றதாக கூறப்படுகிறது. தூக்கத்தில் இருந்த இளம்பெண் அதிர்ச்சியில் திருடன்... திருடன்... என சத்தம் போட்டுள்ளார்.

அப்போது, இளம்பெண்ணின் வாயை ெபாத்திய சங்கர், சத்தம்போடாதே நான் தான் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்குள் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வந்து, பொதுமக்கள் உதவியுடன் சங்கரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், இளம்பெண்ணிடம் பேச வந்தபோது திருடன் என நினைத்து பொதுமக்கள் அடித்து உதைத்தது தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் மேற்கு மாம்பலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : house , Girlfriend, thief a, feet kick
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்