×

புவனகிரி அருகே அதிர்ச்சி சம்பவம் அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடி வீட்டுக் கூரையை உடைத்து நின்றது

புவனகிரி: புவனகிரி அருகே அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இருந்து சிதம்பரம் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் புவனகிரி அடுத்த மேலகீரப்பாளையம் என்ற இடத்தின் அருகே வந்தபோது திடீரென பேருந்தின் பின் பக்கத்தில் உள்ள  ஒரு சக்கரம் தனியே கழன்று பஸ்சுக்கு முன்புறம் வேகமாக ஓடியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். கழன்று வேகமாக ஓடிய சக்கரம் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு சென்று அங்கு இருந்த எத்திராஜ் என்பவரது வீட்டின் வேலி மீது மோதியது. அப்படியும் சக்கரம் நிற்காமல் வேகமாக அருகில் இருந்த அந்த வீட்டின் கழிப்பறை கதவை உடைத்துக்கொண்டு, கழிப்பறையின் மேற்கூரை சிமெண்ட் ஷீட்டை உடைத்துக் கொண்டு மேலே ஏறி சொருகிக் கொண்டது.

உடனடியாக பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு இறங்கி வந்து பார்த்தார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. உடனடியாக பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறக்கப்பட்டு வேறு பேருந்தில் சிதம்பரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ்சின் பின் பக்கம் இருந்த இரட்டை சக்கரத்தில் ஒன்று தனியே கழன்று பஸ்சுக்கு முன்னால் ஓடிய நிலையில், மற்றொரு சக்கரமும் கழன்று விழுவதற்கு தயார் நிலையில் இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பஸ் நிறுத்தப்பட்டதால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. சரியான முறையில் பராமரிக்காததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக இப்பகுதி வாகன ஓட்டுநர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident ,Bhuvanagiri ,house , Shocking incident, Bhuvanagiri, state bus wheel
× RELATED ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டல் பாமக நிர்வாகி கைது