×

கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்ல அனுமதிகோரி வழக்கு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை சேர்ந்த   திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், “கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய  விழாவில் ராமேஸ்வர மீனவர்கள் தங்களது நாட்டு படகுகளில் செல்வதற்கு  அனுமதி கோரி ஐகோர்ட் கிளையில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். அதனை விசாரித்த நீதிபதிகள், ‘‘மோட்டார் பொருத்திய நாட்டுப்படகில் மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, இந்த ஆண்டு மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் உரிய விளக்கம் பெற்றுத்தெரிவிக்க அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kachchuthivu festivities ,country boat
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...