×

காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு : 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலையடுத்து தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இந்திய விமானப்படை நிகழ்த்திய குண்டு வீச்சு தாக்குதலில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள Handwara பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பல தீவிரவாதிகள் மடங்கி இருக்கலாம் என்பதால் அங்கு தேடுதல் வேட்டை தொடர்கிறது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 மேலும் தொடரும் பதற்றத்தால் மக்கள் உச்சக்கட்ட பீதியில் உள்ளனர். ரஜோரியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பலியான நிலையில், காஷ்மீர் எல்லையை ஒட்டிய 5 கிமீ சுற்றளவில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கல்வி நிலையங்கள் மூடப்பட்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக வலைத் தளங்களில் யாரும் பரப்பி பீதியை கிளப்ப வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Security forces ,area ,terrorists ,Kupwara ,Kashmir , Kashmir, Kubvara, Pagans, shot dead, security forces
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...