×

காஷ்மீரின் உரி பகுதியில் 4 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் :இந்திய ராணுவம் தக்க பதிலடி

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொது மக்களில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத தாக்குதலை அடுத்து ஜம்மு - காஷ்மீரின் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் கடந்தஹ் 14ம் தேதியன்று பதற்றம் நிலவி வருகிறது. சில தினங்களாக பாக். ராணுவத்தினரின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியான உரியில் செயல்பட்டு வரும் Gawahalan, Chokas, Kiker மற்றும் Kathi ஆகிய 4 நிலைகளில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. மேலும் கமல்கோட் பகுதியில் உள்ள கிராமங்களிலும் அவர்களின் தாக்குதல் தொடர்ந்தது. இரவு முழுவதும் நீடித்த இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்ட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்களின் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே 8வது நாளாக பாகிஸ்தான் இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : military ,Pakistani ,areas ,Kashmir , Baramulla, Indian positions, Pakistani military, attack
× RELATED கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில்...